முன்மாதிரி கிராமங்களாக உருவாக்க பொட்டிபுரம்-தம்மிநாயக்கன்பட்டியை தேர்வு செய்தார் தேனிஎம்.பி பா.ரவிந்தர்நாத்
..............................................
தேனி மாவட்டம் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பா.ரவீந்திரநாத் தனது தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இந்நிலையில் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டிபுரம். உத்தமபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தம்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை முன்மாதிரி கிராமங்களாக உருவாக்க தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பா.ரவிந்தர்நாத் தேர்ந்தெடுத்துள்ளார். அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயம் கைத்தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இப்பகுதிகளை மேம்படுத்தும் விதமாக பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்.விமலேஸ்வரன் தலைமையிலும் தம்பிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் கதிரேசன் தலைமையிலும் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின்நேர்முக உதவியாளர் அனிஸ் முன்னிலையில் இந்தப் பகுதியில் செய்ய வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் .பொட்டிபுரம் ஊராட்சி தலைவர் அண்ணலட்சுமி .ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்மூக்கம்மாள் சுப்புராஜ் .ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்ஜெகதீஷ். சின்னமனூர் ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து. ஒன்றிய அம்மா பேரவை பொருளாளர் சிவக்குமார் .ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் வேல்ராஜ் உத்தமபாளையம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஆவின் செல்வம் . டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மலைராஜ் மற்றும்அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்