தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்கடந்தநான்கு நாட்களாக உண்ண உணவின்றி பசியால் உறவினர்கள் கைவிடப்பட்ட நிலையில் அனாதையாக கிடந்துள்ளார் இதனை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் திரு. குமரகுருபரன் அவர்கள் மூலமாக பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களுக்கும் பெரியகுளம் ஆய்வாளர் திருமதி மீனாட்சி அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல் ஆய்வாளர் திருமதி மீனாட்சி- காவலர் முருகன் ஆகியோர் உணவின்றி கிடந்த அந்த நபரை மீட்டு அவசரகால உறுதிபணியாளர் முனியம்மாள் அவர்களின் உதவியோடு 108 அவசரகால ஊர்தி மூலமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு அவருடைய உடல் நிலையை தொடர்ந்து கேட்டறிந்து அவருக்கு உரிய சிகிச்சை பற்றிய விவரங்களை ஆய்வாளர் திருமதி. மீனாட்சி கேட்டறிந்துள்ளார் சம்பந்தப்பட்ட நபர் நல்ல நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது
மேலும் அந்த நபரை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார். பெரியகுளம் காவல் ஆய்வாளர் .திருமதி மீனாட்சி மற்றும் பெரியகுளம் காவலர் முருகன் .உரிய நேரத்தில் தகவல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பேருதவி வழங்கிய வழக்கறிஞர் குமரகுருபரன் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்