அரசு நூலகத்தில் நாட்டுநலப்பணிதிட்ட முகாம்*.

அரசு நூலகத்தில் நாட்டுநலப்பணிதிட்ட  முகாம்
 திங்கள்கிழமை 
21.11.2022

திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி  திட்ட   மாணவிகள்  25 பேர் கலந்துகொண்டு லியோ கே .ஜி மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தை மேற்கொண்டனர்.இந்த நூலகத்தில் உள்ள அனைத்து புத்தக அலமாரிகள்  முழுவதையும் சுத்தம் செய்து திருப்பி அதே நிலையில் வைத்தும்,நுழைவு பாதையில் இருந்த  புல் ,புதர்களை அகற்றி சுத்தம் செய்து நாட்டு நலப் பணி திட்டத்தை நிறைவு செய்தனர்.இதில் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியை கிப்டா (எ) ராஜகுமாரி ,நாட்டு நலப்பணித் திட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை.திவ்யா அவர்களும் கலந்து கொண்டு  நாட்டு நலப்பணித்திட்டத்தை மேற்பார்வை செய்தனர். இந்த நிகழ்வில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர்.துரை ராயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார். நூலகப் பணியாளர்   கனகா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நலதிட்டப்பணி இனிதே நிறைவு பெற்றது.
Previous Post Next Post