கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்.

கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்.
தேனி மாவட்டத்தில்
தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க், உத்தரவின் பேரில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா, அவர்கள் வழிகாட்டுதல் படியும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,மேற்
பார்வையில்தேனி மாவட்டத்தில்- கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்வழக்குகளில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை வழக்கில் குற்றவாளிகளான கைலாசபட்டியைச் சேர்ந்த கங்காதேவா மற்றும்  அவர்கள் உறவினர்களின்  53,82,787/- ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான கைலாசபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் பாட்டியின் பெயரில் உள்ள 4,52,085/- ரூபாய் மதிப்புள்ள வீடு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான புகார்களுக்கு தேனி மாவட்டத்தில் 9344014104 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்தேனி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post