சென்னை வேளச்சேரி யைச் சேர்ந்த கின்னஸ் சாதனை நாயகன்.முனைவர்.பாரத் ரத்தன்.சி.அனிஷ்
சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர்.
வயது 10
டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 30 -க்கும் மேற்பட்ட உலக சாதனைகள் மற்றும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனைகளை அங்கீகரித்து கௌரவ டாக்டர் பட்டம் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.இந்திய அஞ்சல் துறை இவருக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு செய்து கௌரவித்தது.மேலும் டெல்லியில் ஃபேஸ் ஆஃப் குரூப் இவருக்கு பாரத் ரத்தன் விருது வழங்கி கௌரவித்தது.மெக்சிகோவில் நடைபெற்ற சொற்பொழிவு நேர்காணலில் பங்குபெற்று அந்நாடு சான்றிதழ் வழங்கி பெருமைப் படுத்தியது.
கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொள்ளுதல் உணவு வழங்குதல் மரம் நடுதல் நெகிழி விழிப்புணர்வு செய்தல் முழு உடல் தானம் விழிப்புணர்வு செய்தல் ஆகிய சமூக சேவைகளை பாராட்டி தென்னிந்திய கலாச்சார அகடமியானது சிறந்த சமூக சேவைக்கான செம்மல் விருது வழங்கி கௌரவித்தது.முழு உடல் தானம் விழிப்புணர்வு பேஷன் ஷோ இஸ்கான் ஆடிட்டோரியம் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது இதற்காக ஹீரோ ஆஃப் தி சொசைட்டி அவார்ட் வழங்கி கௌரவித்தது.சிறந்த சமூக சேவைக்கான விருது (10) பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகள் இவருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய சாதனைகள் இதோடு நின்றுவிடப் போவதில்லை.இந்திய நாட்டிற்காக மேலும் பல சாதனைகள் படைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே இவருடைய இலட்சியம் ஆகும்.