வழக்கறிஞர் முத்துச்சாமி மணிமண்டபம் திறப்பு விழா

வழக்கறிஞர் முத்துச்சாமி மணிமண்டபம் திறப்பு விழா
....................................................

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரபல வழக்கறிஞர் கூ.முத்துச்சாமி அவர்களது நினைவு மணிமண்டபத்தை அவர்களது இல்ல வளாகத்தில் திறந்துவைத்தனர்.

தேனி மாவட்டத்தில் நீண்ட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞராகவும்-
ஏழ்மைநிலையில் இருந்து பங்களாபட்டி என்ற சிறு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து படித்து ஆசிரியராக பணியாற்றினார் - பின்பு வழக்கறிஞர் பணிமீது பற்று கொண்டு வழக்கறிஞருக்கு படித்து வழக்கறிஞராக பணியை தொடங்கினார். இவரது ஆற்றல்மிகு பணியால் அன்றைய மதுரை மாவட்டத்தில் பேரும் புகழும் பெற்று சிறந்து விளங்கினார். குறிப்பாக ஏழை மக்களுக்கு கட்டணம் வாங்காமலேபல வழக்குகளில் ஆஜராகி வாதாடி வெற்றி வாங்கி கொடுத்துள்ள பெருமையை பெற்றவர்.

இவரிடம் 150க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்-பின்பு அரசு வழக்கறிஞராகவும்-
நோட்டரி
ப்ளிக்காகவும் இருந்துள்ளார்


இவருடைய மகன் தர்மபிரபு என்பவர் சார்பு  நீதிபதியாகவும்-இளையமகன் மதன்குமார் வழக்கறிஞராகவும், மகள் பொற்கிழி தற்போது சட்ட கல்லூரி மாணவியாகவும் உள்ளார்.

கடந்தாண்டுஇவருடைய திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் -- கூ.முத்துச்சாமி அவர்களுக்கு அவருடைய சொந்த பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் அமைத்து முதலாமாண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர்
Previous Post Next Post