26.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை, சிதம்பரம் கொத்தங்குடி ரயில்வே கிராசிங் அருகே புது பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்ட, அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழா, முன்னாள் மேஜர் பாலா பாஸ்கரன் தலைமையில், சி.கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அம்சா வேணுகோபால் முன்னிலையில் அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு மாநில தலைவர் முன்னாள் மேஜர் ராதா வரவேற்புரையுடன் அலுவலகம் திறந்து வைத்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் என்கிற வேணு கோபால், சிதம்பரம் பாஜ நகர தலைவர் இன்ஜினீயர் ஜெயக்குமார், முன்னாள் படை வீரர்கள் வெட்ரான்ஸ் நெடுமாறன், கோவிந்தராஜு, பாவாடைசாமி, ஸ்டேட் பாங்க் குமார், தமிழ்மேதை, தங்கராஜ், இலங்கோ, ராஜேந்திரன், மதுரை வீரன் பாஜ நகர நிர்வாகிகள் சின்னிகிருஷ்ணன், குமார், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.