திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கரூர் நோக்கி சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டிச் சென்றபோது திடீரென டயர் வெடித்ததில் லாரி கட்டுப்பட்ட இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் லாரி ஓட்டுநர் செல்வராஜை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தகவல் அறிந்த நகர காவல் நிலைய போலீசார் ஜேசிபி எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் திருவாரூர் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
திருவாரூர் அருகே டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து. விபத்து காரணமாக திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழர் களம் மாத இதழ்
0