நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் மெயின் ரோட்டில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு
விடியில் பிரகாஷ் தலைமையில் தாங்கினர்
குறளிசை கோ பங்கஜம் அவர்கள் விழாவினை துவக்கி வைக்க, ரெயின்போ காமராஜ் திருவள்ளுவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.
மேலும் விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஒரு திருக்குறள் சொல்லி மலர் தூவினார்கள்.
எழுத்தாளர்கள் அன்பழகன் மற்றும் கேசவ மூர்த்தி ராஜகோபால் திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியை துவங்கி வைத்தார்கள்.
100 திருக்குறள் ஒப்புவித்த குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களை விடியல் பிரகாஷ், பகலவன் ரவி, ஆகியோர் வழங்கினார்கள்.
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என சாமிநாதன் மற்றும் பஞ்சாலை சண்முகம் கோரிக்கை வைத்தார்கள்.
விழா முடிவில் சசி நன்றி கூறினார்.
விழாவில் மகாலட்சுமி,
திகுச மணிமாறன், பன்னீர்செல்வம்,தீனா,
சௌடேஸ்வரி, ஜமுனா,
விஜய், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
