ஆற்காடு ஜூலை 17 ;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் கீராம்பாடி ஊராட்சியில் மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 90க்கும் மேற்பட்டோர் தினமும் வேலை செய்து பயன் பெற்று வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடப்பந்தங்கள் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏரி வேலை செய்து கொண்டிருந்தபோது வேண்டா,மீரா, கோகிலா ஆகிய மூன்று நபர்கள் வேலை செய்வதை விட்டுவிட்டு ஏரிக்கு அருகாமையில் உள்ள மாந்தோப்புக்குள் புகுந்து மாங்காய் பறித்து மூட்டை கட்டிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது
அப்பொழுது மாந்தோப்பு காவல்காரர் அவர்களை கண்டுபிடித்து திருடிச் சென்ற மாங்காமூட்டையுடன் வீடியோ எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது இந்த சம்பவம் குறித்து ஏரி வேலை பணித்தள பொறுப்பாளராக இருந்த ஷாலினியிடம் புகார் தெரிவித்துள்ளனர் ஷாலினி இந்த சம்பவத்தைக் குறித்து ஊராட்சி மன்றம் தலைவர் தேவராஜ்க்கு தகவல் கொடுத்துள்ளார் தலைவர் தேவராஜ் வேண்டா, மீரா கோகிலாவுக்கு இது போன்ற தவறுகள் செய்ய வேண்டாம் உங்களால் மற்றவர்களுக்கும் கெட்ட பேரு உண்டாகிறது மாந்தோப்புக்காரர் கோபமாக இருக்கிறார் 2 நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் அதன் பிறகு வந்து வேலை செய்யுங்கள் என்று அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது
அங்கிருந்த மாந்தோப்பு காவல்காரர் எங்களை அதட்டி மாங்காய் எடுக்கக் கூடாது என எச்சரித்தார் நாங்கள் அமைதியாக வந்து விட்டோம் என்றார்
அதனைத் தொடர்ந்து மாந்தோப்பிலுள்ள கோவிந்தசாமியிடம் விசாரித்தோம் அவர் பேசியபோது மாந்தோப்பை குத்தகைக்கு ஆஷீர் பாய் என்பவர் எடுத்திருக்கிறார் நான் காவல்காரனாக இருக்கிறேன் ஏரி வேலை செய்ய வருகிறவர்கள் அடிக்கடி தோட்டத்தில் இறங்கி விடுகிறார்கள் அதுல வேண்டாம்,மீரா, கோக்கில அடிக்கடி தோட்டத்துக்குள் வந்து செல்கின்றனர் எல்லாரையும் விட வேண்டாம் தான் அதிகமா மாந்தோப்புக்கு வந்திருக்கிறார் அவர்களை படம் பிடித்து வைத்திருக்கிறோம் இந்த சம்பவம் குறித்து ஏரி வேலை பணித்தள பொறுப்பாளரிடம் சொன்னோம் என்றார் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜியிடம் விசாரித்தோம் அவர் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் வேண்டுமென்று அவதூறுகளை பரப்பிவருகிறார்கள் நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை எல்லாருக்கும் என்னால் முடிந்த நன்மையை செய்து வருகிறேன் என்றார் இரு தரப்பினரும் சந்தித்து பேசினாலே பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும் என்பது சமூக ஆர்வலர்களும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது