(நெய்)
மாண்புமிகு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்கள் இன்று (2.5.2022) ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் திரு.ஜி.பிரகாஷ் இஆப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.கே.சரஸ்வதி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் திரு.கே.கே.காளியப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.