சிதம்பரத்தில்ரூ.52 லட்சத்தில் பூங்கா கட்டும் பணிநகராட்சி தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

சிதம்பரத்தில்
ரூ.52 லட்சத்தில் பூங்கா கட்டும் பணிநகராட்சி தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

 சிதம்பரம் நடராஜா கார்ட னில் நகராட்சி சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது இதற்கு சிதம்பரம் நகராட்சி ஆணையாளர்
அஜிதா பர்வீன் தலைமை தாங்கினார். நகராட்சிபொறி யாளர் மகாராஜன்  தி.மு.க.கவுன்சிலர்கள் ரமேஷ், வெங்கடேசன், ஜெயசித்ரா  பாலசுப்பிரமணியன், மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந் தில்குமார் கலந்து கொண்டு பூங்கா அமைப்பதற்கான கட்டிட பணியை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க.தக வல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஒப்பந்த நி தாரர் முத்துலட்சுமி, பொதுபணி மேற்பார்வையாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்
Previous Post Next Post